நாடு கடத்தப்படுவாரா மல்லையா? – டிச. 10ல் தீர்ப்பு

விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கில் டிசம்பர் 10ஆம் தேதி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் பெற்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று, லண்டனில் தஞ்சம் புகுந்தார். இவர் மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மல்லையா அடைக்கப்பட உள்ள ஆர்தர் சிறையில் உள்ள அறையின் வீடியோ பதிவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தநிலையில் டிசம்பர் 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version