நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்

நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், ஜெயராம் ரமேஷ், மீனாட்சி நடராஜன், அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹுடா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அறிக்கை குறித்து விரிவான ஆலோசனை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் மக்களை கவரும் பல திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Exit mobile version