அதிகாரியின் வாயில் சாக்கடை ஊற்றிய எம்.எல்.ஏ

சத்தீஷ்கர் மாநிலத்தில் ரமண்சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள தர்பா மாவட்டத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்த தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தீபக் பைஜி, சாக்கடை கலந்த குடிநீரை மக்கள் பருகி வருவதாக குற்றம்சாட்டினார். பாட்டில் ஒன்றில் அடைக்கப்பட்ட மாசுபட்ட குடிநீரை அதிகாரி முன்னிலையில் பருகிய அவர், அரசு அதிகாரி ஒருவரையும் பருகுமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து வேறு வழியின்றி அந்த அதிகாரியும் அந்த சாக்கடை கலந்த தண்ணீரை பருகிவிட்டு, நடவடிக்கை எடுக்குமாறு உறுதியளித்தார்.

Exit mobile version