தொடரும் பெட்ரோல் விலை உயர்வு – ஷேர் ஆட்டோக்கள் கட்டணம் ரூ.5 அதிகரிப்பு

பெட்ரோல் விலையில் நேற்று மாற்றம் எதுவும் இல்லாதநிலையில், இன்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்து 85 ரூபாய் 48 காசுகளாகவும், டீசல் விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில், லிட்டருக்கு 78 ரூபாய் 10 காசுகள் எனவும் விற்பனையாகிறது. இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும்நிலையில், சென்னையில் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் 5 ரூபாய் என்ற அளவில் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளநிலையில், தற்போது ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

Exit mobile version