தேனியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

தேனியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற  நிகழ்ச்சியில் ஆர்டிஐ. மூலம் என்னென்ன தகவல்கள் பெறலாம், தகவல் வழங்கும் அலுவலர்கள், மேல் முறையீடு செய்வது எப்படி போன்ற விவரங்கள் அளிக்கப்பட்டன.

கரகாட்டம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. பெரியகுளம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version