தூய்மையான கடற்கரை – மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் பாராட்டு!

துறைமுக விருந்தினர் மாளிகை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். இதில், பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு கடற்கரை பகுதியை சுத்தம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற மணப்பாடு, முத்துநகர் கடற்கரை பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வாரம் ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மக்கள் கூடும் இடங்களான கடற்கரைகள், வாரம் தோறும் சுத்தப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பது, தூத்துக்குடி மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Exit mobile version