வேதாரண்யம் கடற்கரையில் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

வேதாரண்யம் கடற்கரையில் நடைபெற்று வரும் பூங்கா அமைக்கும் பணியை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரக்கிடங்கு மையம் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரை சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதேபோல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கடற்கரையில் பூங்கா அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இப்பணிகளை கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களை அவர் அறிவுறுத்தினார்.  

Exit mobile version