தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் சிறைப்பிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்த மரிய பாக்கியத்திற்கு சொந்தமான படகில், கடந்த சனிக்கிழமை 8 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வத்தலகுண்டு தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி, மீனவர்கள் 8 பேரையும் சிறைபிடித்துச் சென்றனர். இதுதொடர்பாக தமிழக கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மீனவர்களை, உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுக்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Exit mobile version