திமுகவில் மீண்டும் கலகக் குரல் – கனிமொழி சர்ச்சைக் கவிதை

“நீங்கள் இல்லாத நாட்களில் புதிய முகமூடிகளை பார்த்துவிட்டேன்” என கனிமொழி எழுதியுள்ள கவிதை திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் வார இதழ் ஒன்றுக்கு திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “நீயற்ற நாட்களில் பார்த்துவிட்டேன் பல புதிய முகமூடிகளை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “பொய்களால் ஆன உலகத்தில் எப்படி வார்த்தாய், உன் நாவிற்குள் இரும்புத்தண்டு” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, ஏற்பட்ட அனுபவம் குறித்து கனிமொழி எழுதி உள்ள இந்த கவிதை திமுகவினரிடையே பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

யார் அந்த முகமூடிகள், யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி என பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

Exit mobile version