தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள்கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்திவைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறி உள்ளிட்டவைகளின் வரத்து குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Exit mobile version