தமிழக மீனவர்கள் 27 பேர் விடுதலை

நெடுந்தீவு அருகே கடந்த 10ம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரம் மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், மீனவர்கள் 27 பேரையும் இலங்கை அரசு விடுவித்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Exit mobile version