தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், சர்க்கரை கழக ஆணையராக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் அவர் செயல்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நில நிர்வாக இணை ஆணையர் விஜயராணி, வேளாண்மை கூடுதல் இயக்குனராகவும், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் கற்பகம், நில நிர்வாக இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் பிங்கி ஜோவெல், ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வணிக வரிகள், அதிக வரி செலுத்துவோர் பிரிவு கூடுதல் ஆணையர் பாலாஜி, பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக இணை ஆணையர் மேகநாத ரெட்டி, வணிக வரிகள், அதிக வரி செலுத்துவோர் பிரிவு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெகனாதன், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் அதுல் ஆனந்த், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

வேளாண்மை கூடுதல் இயக்குனர் குமாரவேல் பாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி கல்விப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இயக்குனர் வெங்கடாசலம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் மதிவாணன், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version