கொத்தடிமை ஒழிப்பில் அரசு தீவிர கவனம் – துணை முதலமைச்சர் உறுதி

கொத்தடிமை ஒழிப்பில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருவதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு தொடர்பாக நடைபெற்ற இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று உரையாற்றினார். கொத்தடிமை தனத்தை ஒழிக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த தொடர் நடவடிக்கைகளை நினைவு கூர்ந்த அவர், 2015ஆம் ஆண்டு மாநில அளவில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை சுட்டிக் காட்டினார்.

கொத்தடிமை ஒழிப்பில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்களை அவர் பட்டியலிட்டார். கொத்தடிமை ஒழிப்பில் தீவிரம் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Exit mobile version