தமிழகத்தில் பரவலாக மழை

இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. அதன்படி, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பகதி, கொந்தளிப்பாக காணப்படும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version