"தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு"

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் தலா 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் தலா 7 செ.மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ளிட்ட இடங்களில் தலா 6 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Exit mobile version