டெல்லியில் அதிமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஆலோசனை! 

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த மனுவை அளிக்க உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டார். பிரதமர் மோடியை நாளை அவர் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளிப்பார் என்று தெரிகிறது.

மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்த உள்ளார். தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்தும் பிரதமருடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு தமிழகம் இல்லத்தில் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக விமான நிலையத்தில் முதலமைச்சரை தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏக்கள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

Exit mobile version