டீசல் விலை உச்சம் – மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம்

டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வலியுறுத்தியும், பாம்பன் படகு விசைப படகு மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். ஒரு வார காலமாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version