டிடிவி .யின் சதி ஜெ.வுக்கு தெரியும் -ஓ.பன்னீர்செல்வம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பெற்று தந்தமைக்கு, விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர். விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே TTV தினகரன் முதலமைச்சராக சதி செய்தவர் என்று குற்றம்சாட்டினார். இதன்காரணமாகவே, ஜெயலலிதா அவரை ஒதுக்கி வைத்ததாக குறிப்பிட்டார். தங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்று ஸ்டாலின் கூறியதை சுட்டிக்காட்டி பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதுகெலும்பு இருப்பதால்தான் காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதாக கூறினார்.

 

Exit mobile version