ஜார்ஜ் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மறுப்பு!

விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் மீது முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். குட்கா முறைகேடு விவகாரத்தில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், தற்போது விழுப்புரம் எஸ்.பி.யாக இருக்கும் ஜெயக்குமார் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

ஜெயக்குமார் துணை காவல் ஆணையராக பொறுப்பில் இருந்த போதுதான் குட்கா ஊழல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெற்றது என்றும், அவர் பணியில் சரியாக செயல்படவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஜார்ஜ் முன்வைத்தார். இந்நிலையில் ஜெயக்குமார் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version