செங்கோட்டையை நோட்டமிட்ட 2 தீவிரவாதிகள் கைது!

 டெல்லி செங்கோட்டையை நோட்டமிட்ட 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். பர்வேஷ் மற்றும் ஜாம்ஷெட் ஆகிய 2 பேர் ஐ.எஸ்.ஜே.கே. என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இவர்கள் காஷ்மீருக்கு சென்று ஆயுதங்களுடன் டெல்லி திரும்பியதாகவும் செங்கோட்டை அருகே இவர்களை கைது செய்ததாகவும், டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர். இவர்களை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து டெல்லி கிரைம் பிரிவு அதிகாரி கூறுகையில், அவர்கள் டெல்லியை தாக்க வேண்டும் என வரவில்லை என கூறியுள்ளார். கைதான பர்வேசின் சகோதரரை அண்மையில் காஷ்மீரில் ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும், அதற்கு பலி தீர்க்க அவர் திட்டமிட்டிருக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர். 

 

Exit mobile version