News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சிறைகளில் உள்ள மருத்துவ விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Team by Web Team
October 4, 2018
in TopNews, செய்திகள்
Reading Time: 1 min read
0
சிறைகளில் உள்ள மருத்துவ விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Share on FacebookShare on Twitter

சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைகளில் மரணம் அடையும் கைதிகளின், உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் உள்ள சிறைகளில் 134 கைதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவர்களில் 109 பேர் முதுமையின் காரணமாகவும், 22 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள், முதுமை காரணமாக இறந்ததாகக் கூறப்பட்ட 109 பேரும், சிறைக்குள் இறந்தார்களா அல்லது சிறைக்கு வெளியில் இறந்தார்களா என்ற விபரங்களை தெரிவிக்கவில்லை எனவும், சிறையில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார திட்டங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags: ChennainewsjsabarimalaSupreme Court
Previous Post

ரெட் அலார்ட் எதிரொலி – முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

Next Post

கருப்பு வியாழன் ஆனது இந்திய பங்குச் சந்தை! 

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
அரசியல்

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
Next Post
கருப்பு வியாழன் ஆனது இந்திய பங்குச் சந்தை! 

கருப்பு வியாழன் ஆனது இந்திய பங்குச் சந்தை! 

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version