சத்துணவு முட்டை டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை

சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைக்கான டெண்டரை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தஹீல் ரமணி தலைமையிலான அமர்வு, 20ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 220 கோடி ரூபாய் மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு 20ம் தேதிவரை தடை விதித்து நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Exit mobile version