கேரளாவில் வெள்ளம்-நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 91-ஆக உயர்வு

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளன. மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துகளில் சிக்கி 91 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளோம் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கேரளாவில் உள்ள எர்ணாகுளம், இடுக்கி, ஆழப்புழா உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version