குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – குளிக்கத் தடை

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

நெல்லை மாவட்டம், குற்றாலத்தை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பெரும்பாலான அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Exit mobile version