குற்றாலம், சுருளி, கும்பக்கரை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

மேற்கு தொடர்ச்சி மழைகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தேனி சுருளி அருவியிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு, 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version