குற்றவாளியை தரதரவென இழுத்துச் சென்ற காவல்துறை அதிகாரி! 

 மத்திய பிரதேச மாநிலத்தில் குற்றவாளி ஒருவரை போலீஸ் அதிகாரி தரதரவென இழுத்துச் செல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. சாகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.

எனினும் காவல்துறை அதிகாரியின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ்வர் சிங், இந்த செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். அடையாளம் காணப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

 

 

Exit mobile version