குன்னூர் நெடுஞ்சாலையில் லாரி மீது மரம் விழுந்தது

குன்னூர் நெடுஞ்சாலையில் லாரி மீது மரம் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம்  உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், உதகை – குன்னூர் நெடுஞ்சாலையில் எல்லநள்ளி என்ற இடத்தில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது.

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது மரக்கிளை விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். மரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரம் முறிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர், கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Exit mobile version