காஷ்மீரில் 3 போலீஸ் அதிகாரிகள் கடத்திக்கொலை- தீவிரவாதிகள் அட்டூழியம்

காஷ்மீரில் கடத்தப்பட்ட 3 போலீஸ் அதிகாரிகளை, தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கப்ரான் கிராமத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த பிர்தவுஸ் அஹ்மத் குச்சே, குல்தீப்சிங், நிசார் அஹ்மத் தோபி, பயாஸ் அஹ்மத் பட் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் . இந்த நிலையில் அவர்கள் திடீரென காணாமல் போனார்கள் .
இவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடத்தப்பட்ட 4 பேரில் மூன்று அதிகாரிகளை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். ஒரு காவலர் மட்டும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறை பணியில் இருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, தீவிரவாதிகள் இந்த கொலைகளை செய்ததாக தெரிய வந்துள்ளது.இதன் பின்னணியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Exit mobile version