காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 8 தீவிரவாத முகாம்கள்

பாகிஸ்தான் புதிய அதிபரான இம்ரான் கான், அமைதி பேச்சுவார்த்தை அண்மையில் அழைப்பு விடுத்தார். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் 8 இடங்களில் முகாமிட்டுள்ளன. 250 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

தீவிரவாதிகள் எளிதில் வந்து சென்ற 2 நிலைகள், துல்லிய தாக்குதலின் போது தகர்க்கப்பட்டன. அப்போது, அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. 2016ம் ஆண்டு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்ட போது, இருந்ததை விட தற்போது தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

Exit mobile version