கருணாஸ் மீது நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 10 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தினகரனுக்கு மக்களை பற்றி ஒன்றும் தெரியாது என்றும்,  மக்களை பற்றி படிக்கும் பாடத்தில் வெற்றிபெற்ற பின்பு அரசியலை அவர் எதிர்கொள்ளட்டும்  என்றும் கூறினார்.

மேலும் பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என தெரியாத  கருணாஸ் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.  மேலும், மக்கள் நலன்களை பெற்று தர மத்திய அரசுடன் அதிமுக நல்லுறவுடன் செயல்பட்டு வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் நேரத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருவதாகவும், தேர்தல் களத்திற்கு கமல் வந்தால் அவரை சந்திக்க தயார் எனவும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

Exit mobile version