உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் படை முழு ஆதரவு- கருணாஸ்

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் என அதன் நிறுவனர் கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்…

வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை முழு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும், ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுகவினரை முக்குலத்தோர் புலிப்படை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் எனவும் அதன் நிறுவனர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம, நகர மக்களுக்கான புதிய வளர்ச்சிக்கு வழிவகுக்க, ஆளும்கட்சியான அதிமுக வெற்றி பெற்றால் தான், நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும் எனவும், மறைந்த முதலமைச்சர் வழியில் நல்லாட்சி செய்து வரும் அதிமுகவிற்கு எங்களுடைய ஆதரவு தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version