திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாசுக்கு கொரோனா தொற்று!

திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கருணாசின் உதவியாளருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள தனது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். முன்னதாக பூம்புகார் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version