கருணாஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.கருணாஸ் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாஸ், சர்ச்சைக்குரிய வகையில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார், அவரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்த, கருணாசை காவலில் எடுத்து விசாரிக்க, காவல்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்த நிலையில், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அத்துடன், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கருணாஸ் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, கருணாஸ் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

 

Exit mobile version