கன்னியாஸ்திரி பலாத்காரம் – எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து!

ஜலந்தரை சேர்ந்த பிஷப் பிரான்கோ முல்லக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்கார புகார் அளித்துள்ளார். கடந்த 2014 மற்றும் 2016 கால கட்டத்தில் 13 முறை தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் சர்ச் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து கேரள சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

கன்னியாஸ்திரியை விபச்சாரி என சாடிய அவர், 12 முறை அனுபவித்து விட்டு, 13வது முறை பலாத்காரம் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார். ஏன் முதல்முறை பலாத்காரம் செய்த போது, அந்த கன்னியாஸ்திரி புகார் தெரிவிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 இதனையடுத்து ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version