ஓபியம் வளர்க்க அனுமதிக்கனும்- சித்து சர்ச்சை

 

ஓபியம் போதைச் செடி வளர்க்க அரசு அனுமதி வழங்க வேண்டும் நவ்ஜோத் சிங் சித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பாடியாலா தொகுதி எம்பி தரம்வீர் காந்தி, ஓபியம் போதைச் செடி வளர்ப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்தும் இதே போன்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தரம்வீர் காந்தி மிகச் சரியான காரியத்தைச் செய்துள்ளார். எனவே நான் அவருக்கு முழு ஆதரவு அளிக்கிறேன் என கூறியுள்ளார். எனது உறவினர் ஓபியம் வகை போதைச் செடியை மருத்துவ ரீதியாக பயன்படுத்தி வந்தார். இதனால் நீண்ட ஆயுளுடன் இருந்தார். எனவே பஞ்சாப் மாநிலத்தில் ஓபியம் போதைச் செடி வளர்க்க அரசு அனுமதி வழங்க வேண்டும். இது ஹெராயினை விட மிகச் சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பெருகி வரும் போதைப் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தோடு அம்மாநில முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version