மாநகர பேருந்து ஓட்டுனர்கள் தேவை என்ற விளம்பர போஸ்டரால் சர்ச்சை!

சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க, ஓட்டுநர்கள் தேவை என்றும், மாதம் 22 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் சென்னை முழுவதும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது, ஒட்டுமொத்த போக்குவரத்து
தொழிலாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. விடியா திமுக அரசின் நடவடிக்கைக்கு, திமுக தொழிற்சங்கங்களே, போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தின. இதுகுறித்து நியூஸ் ஜே தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் தலைவர் ராஜு, விடியா திமுக, ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக மக்களை வஞ்சித்து வந்த நிலையில், தற்போது போக்குவரத்து தொழிலாளர்களையும் வஞ்சிக்க தொடங்கி விட்டதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version