ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிகள் வரும் 29ஆம் தேதி முதல் தொடக்கம்

 

உலக கோப்பை கால்பந்து மற்றும் ஆசிய போட்டிகள் என பரபரப்பான கால்பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளன. இந்தநிலையில், ஐ.எஸ்.எல். கால்பந்து 5வது சீசன் போட்டிகள் வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ளன. இந்த போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் கேரளா அணிகள் மோதுகின்றன. நாளொன்றுக்கு 2 போட்டிகள் என்று, முந்தை சீசனில் இருந்த முறை தற்போது மாற்றப்பட்டு, நாளொன்றுக்கு ஒரு போட்டி மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளும் இரவு 7 .30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. கடந்த சீசனில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version