எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியை முதல்வராக்கியது, கருணாநிதியுடன் எம்.ஜிஆருக்கு இருந்த நட்பு ஆகியவற்றை ஸ்டாலின் மறந்துவிடக் கூடாது என்று தெரிவித்தார்.

சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுக புறக்கணிப்பது வருத்தம் அளிக்கக் கூடியது என்று அவர் கூறினார்.

இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என தம்பிதுரை தெரிவித்தார். அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சியை பிடித்திருக்கும் என்று அவர் கூறினார்.

Exit mobile version