எங்களுக்கே தூது விட்டவர்தான் தினகரன் : அம்பலப்படுத்தும் தமிழிசை

பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக எங்களுக்கே தூது அனுப்பியவர்தான் டி.டி.வி.தினகரன் என்று தமிழிசை சவுந்தரராஜன் அம்பலப்படுத்தியுள்ளார். 
 
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாட்டு குறித்த கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில் கூறியதாவது :
 
“தினகரன் அவர்கள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தார் என்று கூறினார். அதற்குரிய விளக்கத்தை நேற்று துணை முதல்வர் அளித்திருந்தார். யார் யாரைப் பார்த்தார்கள் எதற்காக பார்த்தார்கள் என்பது குறித்து  துணை முதல்வர் தரப்பில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. டி.டி.வி தினகரன் பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக எங்களுக்கே தூது அனுப்பினார், இது அரசியல் நிகழ்வு” என்று கூறினார்.
Exit mobile version