உதகைக்கு வரும் பிளானை 3 நாட்கள் தள்ளி வைங்க… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

 

கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை அடுத்து நீலகிரிக்கு அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version