உச்சநீதிமன்ற தீர்ப்பு – நடிகர் சுரேஷ்கோபி எதிர்ப்பு

பாரம்பரியம்மிக்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்த பெண்களுக்கு அனுமதி அளிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகர் சுரேஷ்கோபி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரளா மாநிலம் சுசீந்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சுரேஷ்கோபி, சபரிமலை ஐயப்பன் கோவிலின் கலாச்சார மற்றும் மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும் வரை போராட்டம் நடத்த தயார் என்று சூளுரைத்துள்ளார்.

மேலும், சபரிமலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது வேறு என்றும், மக்களின் மத நம்பிக்கை என்பது வேறு என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

 

Exit mobile version