ஈரான் ராணுவ அணி வகுப்பில் துப்பாக்கிச் சூடு – 22 பேர் கைது

ஈராக்கிற்கு எதிராக நடைபெற்ற போர் நினைவு நாள் ஈரானில் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது.

அப்போது நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வீரர்கள், பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். 69 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஈரான் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கும் என்பது குறிப்பிடத்தகது.

Exit mobile version