இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமா? – புத்த அமைப்பு சீற்றம்

 

இலங்கையை, இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்ற முயற்சி நடப்பதாக புத்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இலங்கையிலுள்ள பவுத்த தலைவர்களை படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக, சிவசேனா, வி.எச்.பி. ஆகிய அமைப்புகள் இருப்பதாக அவர் புகார் கூறியுள்ளார்.
இலங்கையின் தலைவரை தீர்மானிக்கும் சக்தியாக புத்த பிக்குகளே இருப்பார்கள் எனவும் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version