ஆந்திராவில் லாரி விபத்து – தமிழகத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்

செம்மரம் வெட்டுவதற்காக தமிழகத்தை சேர்ந்தவர்கள் லாரியில் வருவதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே வாகன சோதனை நடத்திய போலீசார், தமிழகத்தில் இருந்து வந்த லாரியை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்ற லாரி,  காஜூல மாண்டியம் என்ற இடத்தில் தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு விரைந்தது.

போலீசாரும் லாரியை விரட்டி சென்று திருச்சானூர் அருகே தடுத்து நிறுத்தினர். தப்பிக்க முயன்று லாரியில் இருந்து குதித்த ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த  7 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version