ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

காளஹஸ்த்தி அருகே செம்மரம் கடத்த முயன்ற 5 பேரை கைது செய்த போலீசார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 செம்மரங்கள் உட்பட இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஆந்திரா மாநிலம் காளஹஸ்த்தி அடுத்த காளங்கி அணை வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக மர்ம கும்பல் செம்மரங்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 செம்மரக்கட்டைகள், 2 வாகனங்களை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version