ஆண்கள் நுழைய முடியாத கோவில்களை தெரியுமா?

 

சபரிமலைக்கு எல்லா பெண்களும் போகலாம் என உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் ஆண்கள் நுழைய முடியாத கோவில்கள் பல, இந்தியாவில் இருக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன.

11 வயது முதல் 50 வயதுள்ள அனைத்துப் பெண்களும் பாகுபாடின்றி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் குறிப்பிட்ட சில கோயில்களில் ஒரு சில நாட்கள் மட்டும் ஆண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் புகழ்பெற்ற காமாக்யா கோயில் அமைந்துள்ளது. சக்தி பீடங்கள் 51ல் இந்த காமாக்யா பீடம் முதல் தலமாகும். இந்தக் கோயிலின் கருவறையில் இருக்கும் யோனி வடிவமே இங்கு சக்தியாக வழிபடப்படுகிறது. இங்கு மாதத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தேவி மாதவிலக்காகி இருக்கும் நாட்களாகக் கருதப்பட்டு கோயிலுக்குள் ஆண்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் மாவட்டம் புஷ்கர் பிரம்மா கோயிலில் திருமணமான ஆண்கள் வந்து வழிபட்டால் தோஷம் ஏற்படும் என்று கூறி, திருமணமான ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இங்குப் பூஜை செய்யும் பூசாரிகள் அனைவரும் பிரம்மச்சாரிகள் என்றும் சொல்லப்படுகிறது.

கன்னியாகுமரியில் புகழ்பெற்ற குமாரி அம்மன் கோயிலில் திருமணமான ஆண்கள் கோயில் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், சிவபெருமானைத் தனது கணவராகப் பெறுவதற்காக அன்னை பார்வதி தியானம் செய்த இடமாகக் இக்கோவில் கருதப்படுகிறது. எனவே, அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டுள்ளதால் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பீகாரில் முஷாபர்பூரில் உள்ள அம்மன் கோயிலிலும் மாதத்தில் ஒரு சில நாட்கள் ஆண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்னையின் மாதவிடாய் காலத்தில் ஆண் பூசாரியை கூட அந்தக் கோயில் நிர்வாகம் கருவறைக்குள் அனுமதிப்பதில்லை.

Exit mobile version