அரசு மருத்துவ கல்லூரிகளிகளில் பிளாஸ்டிக்கிற்கு தடை

தமிழகத்திலுள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல் , சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு அலுவலங்களில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளநிலையில் தற்போது மருத்துவ கல்லூரியிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் பிளாஸ்டிக் தடை விதிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version