"அண்ணா போட்ட விதை, மாநில சுயாட்சியை மீட்டுத் தரும்"

செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திராவிட இயல் ஆய்வு நிறுவன துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மாநிலத்தில் சுயாட்சி இருக்கும் போது தான் மக்களுக்கான ஆட்சியை வழங்க முடியும் என்பது அண்ணாவின் கருத்து என்றார். அதன்படி நடந்தால் மட்டுமே எந்த குந்தகமும் ஏற்படாமல் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

மாணவர்கள் நினைத்தால் அரசியல் வரலாற்றை மாற்றி அமைக்க முடியும் என்று தெரிவித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மாநில சுயாட்சிக்காக அன்று மாணவர்கள் நடத்திய போராட்டம் இதற்கு உதாரணமாக அமைந்தது என்றார். அன்று மாநில சுயாட்சிக்காக அண்ணா போட்ட பல நல்ல விதைகள் இன்று மரமாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அது, மாநில சுயாட்சியை மீட்டுத் தரும் என எதிர்பார்ப்பதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.

Exit mobile version