அணை நிரம்பினால் உடனடியாக திறக்க அறிவுரை

 

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 7ஆம் தேதி சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. எனவே, கன மழை பெய்து நீர்நிலைகளில் கரை உடைப்பு ஏதும் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 5 லட்சம் மணல் மூட்டைகளை பொதுப்பணி துறை தயார் நிலையில் வைத்துள்ளது.
நீர் வரத்து, இருப்பு, வெளியேற்றம் குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தெரிவிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அணைகளின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணிக்குமாறும், நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்த தகவல்களை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணை நிரம்பினால் செயற்பொறியாளார்கள் நீரை பாதுகாப்பு கருதி திறந்து விடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version