ஹெச்.ராஜா மீது நடவடிக்கை உறுதி – அமைச்சர் ஜெயக்குமார்

நீதிமன்றம் மற்றும் காவல்துறை மீது தவறான விமர்சனத்தை முன்வைத்த ஹெச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார், மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், நீதிமன்றம் மற்றும் காவல்துறை மீது தவறான விமர்சனத்தை முன்வைத்த ஹெச்.ராஜா மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.

 

Exit mobile version